Wednesday 28 October 2009

நோண்டும் துன்பம்...

தனியே.. தன்னந்தனியே.. அழுவது.. மிகவும் பிடிக்கிறது.. ஆனால்... அழுது தீர்க்க முடியவில்லை.. நாசமா போன தலை.. வலித்து... வலித்து இழுக்கிறது... இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்.. கெஞ்சும் கண்ணும்.. கெஞ்சும் மனதும்.. வெடித்து வெடித்துக் கரைகிறது... மண்டையோடு.. என் இதயத்தை விடக் கல்லாக இருக்கிறது... கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காது அடம் பிடிக்கிறது..
என்ன இல்லை.. என்ன இல்லை.. என்ன இல்ல்ல்ல்ல்லை ... எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்... எல்லாம் இருந்தும்... என்ன இல்லை... என்ன இல்லையெனினும்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. என்னைத் தனியே விடுங்கள்..
என்ன..ஏன்.. எதற்கு.. எப்படி... மாற்றி மாற்றி... கேள்விகள்... குடைச்சல்கள்... சொன்னால் என்ன செய்து விடப் போகிறீர்கள்..? சொல்வது சரிதான்... என்று தலை அசைக்க முடியுமா..? சரியில்லை என விரல் அசைக்க முடியுமா..?
பசப்பு வார்த்தைகள்.. பாழாய்ப் போன சுயநலத்தால்.. இன்றைக்கு ஏதோ தேவை.. ஓட்டி விடலாம்.. நாளைக்கு சமாளித்துக் கொள்ளலாம் என்ற.. மிதப்பு...
அதுக்கென்ன செய்வது.. அவள் தலைவிதி என்று சொல்லக் கூடிய ஒரு அறணை... வேறொரு கால கட்டத்தில்.. இடம் மாற்றி இதையே மொழிதல்.. இயல்பானதில்லையா...
ஆ... நரகம்.. திரும்பவும்.. திரும்பவும்... முடிவே இல்லாத... இந்த நரக வாக்கு வாதம்... நரக வாழ்வு.. இதற்குள்.. உழல்வதே கதியா.. இதுவே விதியா...
வேண்டாம்.. என்னைத் தனியாக விடுங்கள்... நோண்டுவதற்கு உங்களுக்குக் கதியா இல்லை...

No comments:

Post a Comment